மத்திய கிழக்கு போர் காரணமாக ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
செகந்திராபாத் பரேட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எரிபொருள் பயன்பாட்டை குறைக்க கொரோனா காலம் போல் வீட்டில் இருந்து பணியாற்றுங்கள் என அறிவுறுத்திய பிரதமர் மோடி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்த ஏதுவாக அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், கடினமான பொருளாதார சூழ்நிலையில், நாட்டின் வளங்களை சேமிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
















