நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் இன்று முறைப்படி பதவியேற்கவுள்ளனர்.
தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் கூடவுள்ளது. அப்போது, புதிதாக தேர்வான அனைத்து உறுப்பினர்களும், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில், பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவுள்ளனர். இதனை தொடர்ந்து நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
மே 13ஆம் தேதிக்குள் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், நாளை மறுதினம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
















