மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியை, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரிஜு தத்தா பாராட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தலின்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த ரிஜு தத்தா சொந்த கட்சிக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ரிஜு தத்தா ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள ரிஜூ தத்தா, உண்மையை பேசியதற்காகவே கட்சி தன் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளார். அதே வேளையில் மேற்கு வங்க பாஜக முதலமைச்சர் சுவேந்து அதிகாரியையும் ரிஜு தத்தா பாராட்டியுள்ளார்.
குறிப்பாக, சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ரத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகும், அமைதியை கடைப்பிடிக்க சொன்னது ஆயிரக்கணக்கான திரிணாமூல் தொண்டர்களின் உயிரைக் காப்பாற்றியதாக அவர் கூறினார்.
















