சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஐஜி தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஜி தலைமையில் அமைக்கப்படும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையில் 3 காவல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக காவல்துறை தலைமையகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுத்தல், புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















