மின்மாற்றி கொள்முதலில் 397 கோடி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மின்மாற்றி கொள்முதலில் 397 கோடி ரூபாய் முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து காசி என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அனைத்து விசாரணை முடிவற்ற நிலையில் தான் வழக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும், எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது, மின்மாற்றி முறைகேடு விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும், எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது என்றும் அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தாங்கள் தற்போது தலையிட விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள்,
எதுவாக இருந்தாலும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
















