ஆலங்குடி குருபகவான் கோயில்!
Jul 25, 2026, 12:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆலங்குடி குருபகவான் கோயில்!

Murugesan M by Murugesan M
May 3, 2024, 06:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத் தலமாக நிறைய கோயில்கள் இருந்தாலும் ,
அவற்றுக்கெல்லாம் முதன்மையான கோயிலாக, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது. இன்றைய கோயில் அறிவோம் செய்தி தொகுப்பில் ஆலங்குடி கோயிலை பற்றி பார்ப்போம்…

சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98வது தலமாக ஆலங்குடி கோயில் விளங்குகிறது.

கும்பகோணத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்ட இத்தலத்து சுவாமி ஆபத்சகாயேஸ்வரர். ஏலவார்குழலி என்ற திருப்பெயருடன் அம்மை அருள்பாலிக்கிறாள்.

பிரமதீர்த்தம், அமிர்த புஷ்கரணி ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்து தீர்த்தங்களாக உள்ளன. பாற்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்தமையால் சுவாமி ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று போற்றப்படுகிறார்.

தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இவ்வூருக்கும் ஆலங்குடி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எந்த தீங்கும் உண்டாவதில்லை என்கிறார்கள் . பாம்பு தீண்டியும் ,விஷப் பூச்சிகள் கடித்தும் இவ்வூரில் விஷத்தால் யாரும் இறந்ததில்லை என்பதே சான்றாக இருக்கிறது.

கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இங்கே தல விருட்சமாக பூளை செடியே விளங்குகிறது.

குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி திருக்கோவிலில் மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்தி விசேஷம் என்பதால் தட்சிணாமூர்த்தித் தலம் என்று கூறுகின்றனர்.

சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது இங்கே நடந்த அற்புத வரலாறு.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மகா குரு வாரத்தன்று , பஞ்சமுக தீபாராதனையும், மாசி மாத கடைசி குரு வாரத்தன்று சங்காபிஷேகமும் மற்றும் பிற விசேஷ நாட்களில் அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இங்குள்ள குரு பகவானை வழிபட்டால் மாங்கல்யம் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.

ஆலங்குடி குரு ஸ்தலம் தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம்.

முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள் பெறுவர்.

இந்த கோவிலுக்கு வந்து முறையாக வழிபடுபவர்களுக்கு முற்பிறவியில் செய்த தீமைகள் யாவும் நீங்கும் என்கிறது தலபுராணம்.

Tags: Alangudi Gurubhagwan Temple!
ShareTweetSendShare
Previous Post

ராகுலை பிரதமராக்க ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் : பிரதமர் மோடி பேச்சு!

Next Post

GODREJ-ல் பாகப்பிரிவினை முடிவின் பின்னணி என்ன?

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies