ஜன் தன் யோஜனா! : மோடியின் புரட்சிகர நிதி சேமிப்பு திட்டம்!
Aug 7, 2026, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜன் தன் யோஜனா! : மோடியின் புரட்சிகர நிதி சேமிப்பு திட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஜன் தன் யோஜனா திட்டம் 10 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா என்று அழைக்கப்படும் மக்கள் வங்கித் திட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வங்கி சேவைகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதாகும்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி , 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் குறிப்பிட்டு, இந்த திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவரையும் பாராட்டி இருக்கிறார். மேலும், ஜன்தன் யோஜனா திட்டம், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முதன்மையானதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு முதன்முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற உடன் தனது முதல் சுதந்திர தின உரையில், இந்தத் திட்டத்தைப் பிரதமர் அறிவித்தார். பிறகு அதே ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி, மக்கள் நிதி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சாதாரண மக்களுக்கும் வங்கி கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற போன்ற நிதி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல் ஆண்டில் 7.5 கோடி கணக்குகளை இலக்காகக் கொண்டு திட்டம் தொடங்கப் பட்டு, 5 வாரங்களில் 5 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இது இந்த திட்டத்துக்கு கிடைத்த மக்கள் ஆதரவை எடுத்துக் காட்டியது.

முதலில் நான்கு ஆண்டுகள் வரை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த ஜன் தன் யோஜனா திட்டத்துக்குக் காலவரையற்ற நீட்டிப்பு வழங்கப்பட்டது.

ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கி வெற்றிகரமாக பத்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில், இத் திட்டத்தின்கீழ் இதுவரை 53 கோடி முறையான வங்கி கணக்குகள் தொடங்கப் பட்டிருக்கின்றன. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தின் மக்கள் தொகைக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தால் 29.56 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர் . சொல்லப்போனால் இது ரஷ்ய மக்கள் தொகையின் இரு மடங்காகும். ஜன் தன் யோஜனா திட்டத்தால் 2.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 99.97 சதவீத குடும்பங்கள் இப்போது இந்த திட்டத்தின் மூலம் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயம், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு அரசு மானியங்கள் நொடிப் பொழுதில் நேரடியாக மக்களின் கணக்குகளில் சென்று சேர்கிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த திட்டத்தின் வெற்றி என்பது மக்கள் இயக்கத்தின் விளைவாகும் என்று தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம், தங்கள் சேமிப்பு அதிகரித்துள்ளதாகவும், தங்கள் தேவைகளுக்காக வங்கிகளில் கடன் பெறுவது சுலபமாக இருப்பதாகவும் மக்கள் பெருமையாக சொல்வதைக் கேட்க முடிகிறது.

மேலும், ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் நிதி சேவைகளுக்கான பாலின இடைவெளி, சமூகத்தில் குற்ற விகிதங்கள், மது மற்றும் புகையிலை நுகர்வு கணிசமாக குறைந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப் பட்ட இந்த மக்கள் நிதி திட்டம் இந்தியாவின் புரட்சிகரமான நிதி சேமிப்பு திட்டம் என்று போற்றப்படுகிறது.

Tags: Jan Dhan Yojana! : Modi's revolutionary financial savings plan!
Share
Tweet
SendShare
Previous Post

மல்லுவுட்டில் மல்லுக்கட்டு! : பாலியல் புகார்களால் பற்றியெரியும் திரையுலகம்!

Next Post

நாக தோஷம் நீக்கும் நாகராஜா கோயில்!

Related News

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies