உத்தரப்பிரதேசத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய இரண்டு சிறுவர்கள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் சித்தார்த் நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் மீது 2 சிறுவர்கள் ஏறியுள்ளனர். இந்நிலையில், நீர்த்தேக்கத்தின் ஏணி சேதமடைந்ததால் இரவு முழுவதும் சிறுவர்கள் அங்கேயே சிக்கித் தவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் வேண்டுகோளின்பேரில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, சிறுவர்கள் இருவரும் மீட்கப்பட்டனர்.
















