பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் கர்மயோகி விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பழங்குடியினப் பகுதிகளில் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பாடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய மோகன் பாகவத், பழங்குடியின சமூகங்களுக்கு சம வாய்ப்பையும், அவர்களை பிரதான வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைக்கவும் அழைப்பு விடுத்தார். அன்னிய படையெடுப்புகள் இருந்தபோதிலும் பழங்குடியினரும், பட்டியல் சமூகத்தினரும் இந்தியாவின் அடையாளம் மற்றும் ஆன்மாவை பாதுகாத்ததாக மோகன் பாகவத் குறிப்பிட்டார்.
















