தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் அங்கம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தென் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பணியாற்ற உள்ள முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் திருவாரூர்,தஞ்சாவூர்,கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி,.திருப்பத்தூர், மானாமதுரை,மதுரை தெற்கு, சாத்தூர், ராமநாதபுரம்,.திருச்செந்தூர், வாசுதேவநல்லூர்,ராதாபுரம், நாகர்கோவில்,குளச்சல்,பத்மநாபபுரம்,விளவங்கோடு என 17 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களும் 17 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும், தமிழகத்தின் வளர்ச்சியையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க பாடுபடுவோம் என்றும் கூறினார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
















