வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்..
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில் திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் காணொலி வாயிலாக பங்கேற்று விளக்கம் அளித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
















