தேர்தலில் இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாலகிருஷ்ணன், இடதுசாரிகளுக்கு ஆறு இடங்களை ஒதுக்க வேண்டும் என எவ்வளவோ வற்புறுத்தியும் திமுக தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பதுதான் உண்மை என்றும் கூறினார். வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
















