ராகுல்காந்தியின் உரையை தவறாக மொழிப்பெயர்த்ததற்கு தான் ஒன்றும் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலவில்லை, அரசு பள்ளியில்தான் பயின்றேன் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல்காந்தியின் உரையை தமக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாக தெரிவித்தார்.
எனக்கும், ராகுல்காந்திக்கும் இடைவெளி அதிகமாக இருந்தது என்றும், ராகுல்காந்தியின் உரை முழுமையாக கேட்கவில்லை என்பதால் தவறாக மொழிபெயர்த்துவிட்டேன் என்றும் அவர் கூறினார்.
“சிபிஎஸ்சி பள்ளியில் படிக்கவில்லை என்றும், அரசுப்பள்ளியில் தான் ஆங்கிலம் படித்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.
















