விற்பனை சரிவால் ஆட்குறைப்பு? சென்னையில் சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டம்!
Aug 24, 2025, 05:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விற்பனை சரிவால் ஆட்குறைப்பு? சென்னையில் சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 13, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் விற்பனை சரிவு, அதிகரித்து வரும் போட்டி போன்ற காரணங்களால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சாம்சங் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சென்னை சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

உலகளவில், மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக சாம்சங் விளங்குகிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் Memory Chips, Smart Phones, AC, FRIDGE, WASHING MACHINE உள்ளிட்ட மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது.

சாம்சங் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொழிற்சங்கம் என்ற ஒன்றே இல்லை. தொழிற்சங்கம் உருவாகாமல் தடுக்கும் பொருட்டு தொழிலாளர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருந்தது சாம்சங் நிறுவனம். தொழிற்சங்கம் உருவானாலும் அதனை உடைக்கும் சதி வேலையிலும் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டது. இதற்கெனவே “ஏஞ்சல் ஏஜெண்டு” என்ற பெயரில் கங்காணிகளை நியமித்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.

தொழிலாளர்களின் தொடர் முன்னெடுப்பால் 2010-களின் பிற்பகுதியில் சாம்சங்கில் தொழிற்சங்கம் உருவானது. இப்பொழுது சாம்சங் மின்னணுவியல் தேசிய தொழிற்சங்கம் (National Samsung Electronics Union) உருவாகி அதில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது சாம்சங் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமாகும்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தொழிற்சங்கம், தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.

இதன் விளைவாக கடந்த ஜூலையில் 3 நாட்கள் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் சாம்சங் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், போராட்டத்தால் சாம்சங் மேலும் நஷ்டத்தைச் சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள சாம்சங் தொழில்சாலை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் உத்திரபிரதேசத்திலும் தமிழகத்திலும் இரண்டு சாம்சங் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவில் சாம்சங்கின் சுமார் 1,00,772 கோடி ரூபாய் வருவாயில் 30 சதவீதம் தமிழக சாம்சங் தொழில்சாலையின் பங்கு என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே ,பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

உதாரணமாக, ஹரியானாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் ஊழியர்கள் போராட்டம், தமிழகத்தில் Foxconn நிறுவனத்துக்கு எதிரான போராட்டம், மகாராஷ்டிராவில் ஹூண்டாய்க்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டம், ரெனால்ட்-நிசான், ஹூண்டாய் மற்றும் ஃபோர்டு மோட்டார் கோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழியர்கள் போராட்டம், கர்நாடகாவில் ஆப்பிள், விஸ்ட்ரான் மற்றும் டொயோட்டா மோட்டார் ஊழியர்கள் போராட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம், அமேசான் தொழிலாளர்கள் போராட்டம், ஜெர்மனி விவசாயிகள் போராட்டம் என அடுத்தடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராக நடைபெறும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களைப் பீதியடைய வைத்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியக் குழுவை தென் கொரியாவிற்கு வரவழைத்து, தற்போதைய பிரச்சினைகள் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் பற்றி சாம்சங் நிர்வாகம் விவாதித்து வருகிறது.

சாம்சங்கின் போராட்டங்கள், Xiaomi மற்றும் Vivo போன்ற பிராண்டுகளின் அபரிதமான சந்தை போட்டி, ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுடனான ஏற்பட்ட மோதல்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் ஆகியவற்றால் சாம்சங் நிறுவனம் கடும் நெருக்கடியில் உள்ளது என்று தெரிய வருகிறது.

இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதை நிறுத்திவிட்டதாகவும், ஏற்கெனவே தாமாகவே பணி விலகிய பதவிகளை நிரப்பாமல் வைத்திருப்பதாகவும், ஆஃப்-ரோல் ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags: Samsung employees strikesamsung sales downchennai samsung strikeChennaitamilnadusamsung
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை – தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Next Post

அறநிலையத்துறை ஊழல் குறித்து பேசியதால் 27 வழக்குகள் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies