கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் : காலிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம் - சிறப்பு கட்டுரை!
Aug 7, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் : காலிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கனடாவில் பிராம்டன் நகரில் உள்ள இந்து சபா கோயிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் கோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த இந்திய தூதரக முகாமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நீண்ட ஆண்டுகளாகவே , கனடாவில் உள்ள இந்துக்கள் மீதும் ,இந்து கோயில்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

கனடாவின் மிசிசவுகா நகரில் உள்ள ராமர் கோவிலில் தாக்குதல் நடந்தது. கனடாவின் வின்ட்சார் நகரில் உள்ள இந்துக் கோயிலைத் தாக்கியதோடு, அதன் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டன.

கனடாவின் எட்மன்டனில் உள்ள சுவாமி நாராயணன்  கோயிலும் தாக்கப்பட்டது. இப்படி, கனடாவில் வாழும் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோயிலில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த பக்தர்களைக் காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்து குழந்தைகள், பெண்கள்  உள்ளிட்டோர் தாக்கப்பட்டுள்ளனர்.

1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைக் கண்டித்து இந்து சபை கோவில் அருகே போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்கள் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள், திடீரென இந்துக் கோயிலில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் பலர் காலிஸ்தான் ஆதரவு கொடிகளை ஏந்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனடா இந்து அறக்கட்டளை, இந்த தாக்குதல் சம்பவ வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. அந் வீடியோவில், காலிஸ்தான் ஆதரவு கொடிகள் ஏந்திய காலிஸ்தான் சீக்கியர்கள் தடிகளைக் கொண்டு இந்து பக்தர்களைத் தாக்குகின்றனர்.

இந்த சம்பவத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களும் தாக்கப்பட்டதாக கூறியுள்ள கனடா இந்து அறக்கட்டளை இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும்  காலிஸ்தான் ஆதரவு அரசியல்வாதிகளின் துணையோடு நடக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

இந்து சபை கோயிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு இந்துகளைப் பாதுகாத்த காவல்துறையை பாராட்டியுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்து சபா கோயிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனடா எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரி (Pierre Poilievre), இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் தீவிரவாதிகள் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டதாக கூறியுள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா, கனடாவில், இந்துக்கள் மீதான காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்முறை எந்த அளவுக்கு ஆழமாக உள்ளது என்பதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

கனடாவில் கருத்து சுதந்திரத்தின் பெயரில் காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்துக்களைத் தாக்க இலவச அனுமதி பெறுவதாக குற்றம் சாட்டியுள்ள சந்திரா ஆர்யா, நாட்டின் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறி உள்ளார்.

கனடாவில் இந்துக்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், கனடாவில் வாழும் இந்துகளுக்கு, கனடா அரசு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

மேலும், இந்திய தூதரக முகாமையும், இந்து கோவிலையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இந்தியா விரோத சக்திகளால் திட்டமிடப்பட்ட வன்முறை என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Tags: Khalistan militantsMississaugacanadam pm condemnCanadaHindus attacked in canadaBrampton.
Share
Tweet
SendShare
Previous Post

வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – விறுவிறுப்பாக நடைபெறும் அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணி!

Next Post

திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட செலர்ஜின் கேப்சூல் பறிமுதல் – 3 பேர் கைது!

Related News

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies