மூன்று போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!
Jul 6, 2025, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மூன்று போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ஜனவரி 15-ம் தேதி மகாராஷ்டிராவிற்கு பயணம்!

Web Desk by Web Desk
Jan 13, 2025, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் வருகின்ற 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணியளவில், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3:30 மணியளவில், நவி மும்பையின் கார்கரில் இஸ்கான் கோயிலை அவர் திறந்து வைக்கிறார்.

பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பில் உலகளாவிய தலைமைத்துவமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் மூன்று முக்கிய கடற்படை போர் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

பி15பி ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதி கப்பலான ஐஎன்எஸ் சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன அழிப்புக் கப்பல்களில் ஒன்றாகும். இது 75% உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது.

அதிநவீன ஆயுத-சென்சார் தொகுப்புகள், மேம்பட்ட கட்டமைப்புத் திறன்களை இக்கப்பல் கொண்டுள்ளது. பி17ஏ ஸ்டீல்த் ஃப்ரிகேட் திட்டத்தின் முதல் கப்பலான ஐஎன்எஸ் நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பி75 ஸ்கார்பீன் திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வக்க்ஷீர், நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, நவி மும்பையின் கார்கரில் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோயிலை பிரதமர் திறந்து வைக்கிறார்.

ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் பல தெய்வங்களைக் கொண்ட கோயில், வேத கல்வி மையம், அருங்காட்சியகங்கள், அரங்கு,  குணப்படுத்துதல் மையம் ஆகியவை அடங்கும். வேத போதனைகள் மூலம் உலகளாவிய சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags: pm modi maharashtra visitmaharashtra visit of pm modiPM Modipm modi to visit maharashtra & goaNarendra Modipm modi maharashtrapm narendra modipm narendra modi maharashtra visitpm modi speechpm modi in maharashtra newspm narendra modi speechprime minister modipm narendra modi livepm modi livethree warships
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!

Next Post

2 ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies