12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, அவை 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரீஸில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 12 ஆண்டுகளில் ஏழை எளியோருக்காகக் கட்டிக் கொடுத்துள்ள நிரந்தர வீடுகளின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டின் வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பிரதமர் மோடி,
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முதன்மைப் பொருளாதார நாடாக இந்தியா இன்று உருவெடுத்துள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்தியா, இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் தயாரிப்பு நாடாக உருவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகள் வெறும் சாதனைகளுக்கான காலம் மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த இந்தியாவின் லட்சியங்களையும், கனவுகளையும் புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற பொற்காலம் என்றும்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து 12 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்தது என் வாழ்வின் பெரும் பாக்கியமாகும் என்றும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
















