சென்னை வருமான வரித்துறை முதன்மை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி ரெங்கராஜ் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ரெங்கராஜ் கோவையில் பணியாற்றிய போது, தாளவாடி மற்றும் கோவை பகுதிகளில் சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பில் உல்லாச விடுதி மற்றும் நிலங்களை முறைகேடாக வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 2010 முதல் டிசம்பர் 2024 வரையிலான காலக்கட்டத்தில் இவர்களின் வருமானம் மற்றும் செலவுகள் கணக்கிடப்பட்டன. இதில், தங்களது சட்டபூர்வமான வருமானத்தை விட 1.83 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, ரெங்கராஜ் மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
















