தாம்பரம் அருகே 4 மணி நேர மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம், சாம்ராஜ் நகர், கரகேஸ்வரி நகர், வி.ஜி.பி. பொன் நகர், மணவாளன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தாம்பரம் – வேளச்சேரி சாலையில் இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினரும் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதேபோல் உள்ளகரம் இளங்கோ தெருவில் நேற்று மாலை 5 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
















