முதல்முறையாக வேலைபெற்று பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில், தனியார் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதேபோல, புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் நிறுவனம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை 2 ஆண்டுகளுக்கு வழங்கவுள்ளது.
இந்நிலையில், 15 லட்சம் ஊழியர்களுக்கு முதல் தவணை ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஊக்கத்தொகை விடுவிக்கப்படவுள்ளது.
















