சென்னை அகில இந்திய வானொலியின் முன்னாள் மூத்த அதிகாரி ஸ்ரீதர் இணைந்து எழுதிய நூலை மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார்.
சென்னை அகில இந்திய வானொலி வளாகத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் மூத்த அதிகாரி ஸ்ரீதருக்கு பாராட்டு விழா மற்றும் அவர் இணைந்து எழுதியுள்ள “Innovations in Indian Public Service Broadcasting” என்ற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று ஸ்ரீதரை கௌரவித்ததுடன், நூலையும் வெளியிட்டார்.
விழாவில் பேசிய எல். முருகன், வானொலித் துறையில் ஸ்ரீதர் ஆற்றிய சேவைக்கு உரிய அங்கீகாரமாகவே பத்மஸ்ரீ விருது அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
அகில இந்திய வானொலி தனது 90-ஆவது ஆண்டு பயணத்தை கொண்டாடி வரும் இந்த நேரத்தில், நூல் வெளியீட்டு விழா நடைபெறுவது பெருமைக்குரியது என்றும் குறிப்பிட்டார்.
தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டினார்.
















