சூடுபிடித்த வார்த்தைப் போர்: பேசுபொருளான ஸ்ரீதர் வேம்புவின் பதிவு
Jun 8, 2026, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

சூடுபிடித்த வார்த்தைப் போர்: பேசுபொருளான ஸ்ரீதர் வேம்புவின் பதிவு

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ZOHO தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்புவின் பதிவால், இந்திய அறிவியல் முறைகள் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது பற்றிய ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..!

சென்னை ஐஐடி-யின் இயக்குநராக உள்ள காமகோடி, மாட்டின் சிறுநீரில் பேக்டீரியா எதிர்ப்பு மற்றும் செரிமான நன்மைகள் அதிகம் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கள் பல தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளானது. சிலர் அவரது கூற்றுக்களை போலி அறிவியல் என முத்திரை குத்தினர்.

ஆனால் ZOHO நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புவோ, காமகோடியின் கருத்துக்களை ஆதரித்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். மாட்டின் சிறுநீர் மற்றும் சாணத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பது மூட நம்பிக்கை அல்ல, அது நவீன விஞ்ஞானம் என அந்த பதிவில் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து விமர்சகர்களுள் ஒருவரும், கல்லீரல் நிபுணருமான மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ், ஸ்ரீதர் வேம்புவின் பதிவை மேற்கோள்காட்டி அவரை அறிவியல் பற்றிய படிப்பறிவு இல்லாதவர் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதில், “பண்டையகால முட்டாள்தனத்தை” ஊக்குவிப்பதை நிறுத்துமாறும் மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ் வலியுறுத்தியிருந்தார். மேலும், சிறுநீரில் எந்த வித நன்மைகளும் இல்லை என குறிப்பிட்ட அவர், அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் எந்தவித அறிவியலும் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நவீன விஞ்ஞான அணுகுமுறையுடன் பாரம்பரிய நடைமுறைகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மருத்துவர் அபி பிலிப்ஸின் பதிவுக்கு ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார். குறிப்பாக “அறிவியல் ஆணவத்துடன் கலக்காது என்பதால், மருத்துவ அறிவியலை நிறுவ பணிவு அவசியம்” என தெரிவித்துள்ள அவர், “விஞ்ஞான அறிவியல் நமக்கு முழுமையான உறுதிபாடுகளை ஒருபோதும் வழங்குவதில்லை” என கூறியுள்ளார்.

பிரபல கல்லீரர் நிபுணர் மற்றும் ZOHO தலைமை செயல் அதிகாரிக்கு இடையிலான விவாதங்கள் அடங்கிய இந்த பதிவுகள், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தற்போது பலரும் அந்த பதிவுகளின் கீழ் பண்டைய அறிவியல் முறைகள் குறித்த விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: A Heated War of Words: An Account of the Eloquent Sridhar Vembu
ShareTweetSendShare
Previous Post

எவரெஸ்ட்டை விட இரு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு? நெதர்லாந்து விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல் – சிறப்பு கட்டுரை!

Next Post

பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்!

Related News

பலூச் அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முயற்சி : பாகிஸ்தான் சீனாவின் திட்டம் தோல்வி – செக் வைத்த அமெரிக்கா : சிறப்பு தொகுப்பு!

எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல் : அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – சிறப்பு தொகுப்பு!

கோயில்களில் ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட் பெறும் வசதி – அறநிலையத்துறை திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்கேஷ் எச்சரிக்கை!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக செய்த தவறை தவெக அரசும் செய்கிறது – தமிழிசை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் – அமைச்சர் நிர்மல் குமாரிடம் மனு அளித்த கிராம மக்கள்!

முந்தைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை வரியாக மாற்றம் – அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவு!

சென்னை மாநகராட்சி 75% கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை சமர்பிக்கவில்லை என தகவல்!

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி!

அரசுப்பேருந்தில் திடீர் தீ – ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பிய பயணிகள்!

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் – நெல்லை நீதிமன்றம் கண்டனம்!

கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறை கொள்கை – விரைவில் முதல்வர் அறிவிப்பார் என ஆதவ் அர்ஜூனா தகவல்!

உலகச் சுற்றுச்சூழல் தினம் – ஆரோவில் நகரில் கோலாகலம்!

குதிரை பேர புகார் – சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ. 29 உயர்வு – சென்னையில் ரூ.928. 50க்கு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies