ஆண்டுதோறும் 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமண உதவியாக தலா 10 லட்ச ரூபாய் வழங்க தனது மகன் ஜீத் அதானி தீர்மானம் எடுத்திருப்பதாக தொழிலதிபர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
ஜீத் அதானிக்கும், திவா ஷாவுக்கும் வரும் 7-ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு விருந்து அளித்து ஜீத் அதானி உபசரித்தார்.
மேலும், ஆண்டுதோறும் தனது திருமண நாளன்று 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமண உதவியாக தலா 10 லட்ச ரூபாய் வழங்க அவர் தீர்மானம் எடுத்தார்.
தனது மகனின் இந்த செயலை பாராட்டிய கெளதம் அதானி, பிறரது திருமணத்துக்கு உதவி செய்வது தனக்கு மனநிறைவை தருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.