இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
Jul 28, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Murugesan M by Murugesan M
Feb 12, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர்  நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர்.

பாதுகாப்பு, விண்வெளி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மன்றத்தில் ஒன்று கூடினர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி விரிவடைந்து வரும் இந்தியா-பிரான்ஸ் வணிக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பையும், இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மைக்கு அது அளித்துள்ள உத்வேகத்தையும்  குறிப்பிட்டார்.

அதன் நிலையான அரசியல் மற்றும் கணிக்கக்கூடிய கொள்கைச் சூழல் அமைப்பின் அடிப்படையில், உலகளாவிய முதலீட்டு இடமாக இந்தியாவின் ஈர்ப்பை அவர் எடுத்துரைத்தார்.

சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசுகையில், காப்பீட்டுத் துறையில் இப்போது 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் சிவில் அணுசக்தித் துறையில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி  குறிப்பிட்டார்.

சுங்கக் கட்டணம் சீரமைக்கப்பட்டது, வாழ்க்கை முறையை எளிதாக்குவதற்காக எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிவிதிப்பு முறை கொண்டுவரப்பட்டது ஆகியவற்றை சுட்டிக்காட்டி சீர்திருத்தங்களைத் தொடர்வதற்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிப்பிட்டார்.

நம்பிக்கை அடிப்படையிலான பொருளாதார நிர்வாகத்தை நிறுவுவதற்காக ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த சில ஆண்டுகளில் 40,000க்கும் மேற்பட்ட இணக்க ஏற்பு நடைமுறைகள்  சீரமைக்கப்பட்டுள்ள தகவலையும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சியில் பாதுகாப்பு, எரிசக்தி, நெடுஞ்சாலை, சிவில் விமானப் போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், நிதி தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளர்ச்சித் துறைகளில் வழங்கப்படும் மகத்தான வாய்ப்புகளைப் பார்வையிடுமாறு பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் திறன்கள், திறமை மற்றும் புதுமை, அதன் புதிதாகத் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி, குவாண்டம், முக்கியமான தாதுக்கள் மற்றும் ஹைட்ரஜன் பணிகளில் உலகளாவிய பாராட்டு மற்றும் ஆர்வத்தை விளக்கிய அவர், பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தத் துறைகளில் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும்  வலியுறுத்தினார். புதுமை, முதலீடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கூட்டாண்மைகளை வளர்ப்பதில் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், பிரான்சின் பொருளாதாரம், நிதி மற்றும் தொழில்துறை, டிஜிட்டல் இறையாண்மை அமைச்சர் எரிக் லோம்பார்ட் ஆகியோரும் உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pm modi visit francePM Modi invites French companies to work with India!pm modi news todayindia vs france
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

Next Post

JKF படுகொலையில் நீடிக்கும் மர்மம் : ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி வெளியாகும் 3000 ரகசிய பதிவுகள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies