போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!
Sep 12, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 11:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை சிட்லப்பாக்கத்தில் போலீஸ் என கூறி 70 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செம்பாக்கத்தைச் சேர்ந்த சுஹேல் அகமது என்பவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து 70 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். பின்னர் அதனை தனது கடையில் பணிபுரியும் இருவரிடம் கொடுத்து வீட்டில் ஒப்படைக்க கூறியுள்ளார்.

அதன்பேரில் செல்போன் கடை ஊழியர்கள் இருவரும் சுஹேல் அகமதுவின் வீட்டுக்குச் செல்ல குரோம்பேட்டை ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தங்களை சிட்லப்பாக்கம் போலீசார் என கூறி பையை சோதனை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் செல்போன் கடை ஊழியர்களை இருவேறு இடங்களில் இறக்கிவிட்டு 70 லட்சம் ரூபாய் பணத்துடன் அக்கும்பல் தப்பிச் சென்றது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிட்லப்பாக்கம் போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை திருச்சி அருகே கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்குமார் என்பவரிடம் மட்டும் போலீசார் தொடர் விசாரணை நடத்திவரும் நிலையில், மற்ற நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: chennai news todayThe gang who claimed to be the police and checked the bags!
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரி : மூன்று வாலிபர்கள் கொலை : ரவுடி சத்யா உட்படி 10 பேர் கைது!

Next Post

நெல்லை அரசு மருத்துவமனை : நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies