தமிழகத்தை அதிர வைத்த கொலை!
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தை அதிர வைத்த கொலை!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கோரி மனு அளித்த நிலையில் நடந்த இந்த கொலைக்கு காவல்துறையினரே பொறுப்பு என உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

”எனக்கு கொலை மிரட்டல்… ஒருத்தர், ரெண்டு பேரு இல்ல. 20, 30-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் கொலை செய்ய சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் என்னை கொன்னுடுவாங்க….” இதெல்லாம் தமிழ்நாடு முதலைச்சரிடம் உயிர்பாதுகாப்பு கேட்டு ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ. அவர் திருநெல்வேலி டவுன் தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்கிற பிஜிலி. அறுபது வயதான அவர், காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி, விருப்ப ஒய்வு பெற்றவர்.

நிச்சயம் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பி இருந்தவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியே பரிசாக கிடைத்துள்ளது. டவுன் ஜாமியா தைக்கா தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்து மோட்டார் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜாகீர் உசேனை, வழி மறித்த கும்பல், சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. இந்த கொலைக்கு காரணம் காவல்துறையின் மெத்தனம் மட்டுமல்ல, காவல் துறையினரே உடந்தையாகவும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உறவினர்கள் எழுப்பியுள்ளனர்.

கொலையான ஜாகீர் உசேன் வெளியிட்ட வீடியோவில், கொலை மிரட்டலுக்கு முக்கிய காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர்தான். தவுபிக் கொடுத்த பொய்யான புகாரில் தம் மீதும், தமது மனைவி மீதும் பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஜாகிர் உசேன் கொலைக்கு காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளே காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். வக்பு வாரியத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இடம் தொடர்பான முன்விரோதத்தில்தான் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட 2 மாதத்தில் நெல்லையில் ஜாகீர் உசேன் கொல்லப்பட்டுள்ளார்.
கனிம வளக் கொள்ளைகளுக்கு எதிராக போராடிய ஜெகபர் அலி, லாரியை மோதி கொலை செய்தனர். எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளை மட்டும் நின்றபாடில்லை. இதைத் தட்டிக் கேட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று அச்சப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த தமிழரசன் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் (17ம் தேதி நம்மிடம் விஷூவல்ஸ், பைட் உள்ளது கொடுத்த புகாரே சாட்சியாக உள்ளது.

பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுக்காமல், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு நெல்லையில் ஜாகீர் உசேன் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்கிறார்கள் தன்னார்வலர்கள். மக்கள் நலன் சார்ந்து குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர்கள், கொல்லப்படுவது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக விரோதிகளை இனியாவது இரும்புக் கரம் கொண்டு அடக்குவாரா முதலமைச்சர்…? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Tags: The murder that shocked Tamil Nadu!ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலைcm stalintamil janam tvTn newsதமிழகத்தை அதிர வைத்த கொலை!
ShareTweetSendShare
Previous Post

குடியரசுத் துணைத் தலைவருடன் எல். முருகன் சந்திப்பு!

Next Post

12-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடித்துக் குதறிய தெருநாய்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies