திண்டுக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
காந்திகிராமம் பல்கலைக்கழக மாணவர்கள், கள ஆய்வுக்காக 2 மினி வேன்களில் சிறுமலைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மலைச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.