கர்நாடகாவில் மசூதிக்கு வெளியே இளம்பெண்ணைத் தாக்கிய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் தாவனகரே பகுதியைச் சேர்ந்தவர் சபீனா பானு. இவரது நடத்தை மீது சந்தேகம் அடைந்த கணவர் ஜமால் அகமது, அதே பகுதியில் உள்ள மசூதியில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 9-ம் தேதி சபீனா பானு மற்றும் அவரது உறவினர்கள் மசூதிக்கு விசாரணைக்காகச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த சிலர் அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயம் அடைந்த சபீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.