UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
Apr 29, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Murugesan M by Murugesan M
Jul 31, 2025, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. புதிய யுபிஐ விதிகள் என்ன? பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவந்தது. ரொக்கத்திற்கு மாற்றாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட யுபிஐ முறை, தற்போது சாதாரண பெட்டிக்கடை முதல் பிரமாண்ட ஷோரூம் வரை பரவிக் கிடக்கிறது.

யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் கோடி ரூபா அளவுக்குப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாகவும், ஆண்டுதோறும் இது 32 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவிகிதம் யுபிஐ கணக்குகள் மூலமே நடைபெறுகிறது. இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 வங்கிகளும் ஒரே தளத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது.

இது ரொக்கப் பரிவர்த்தனையை, கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையாக மாற்றி புதிய புரட்சியை ஏற்படுத்திய யுபிஐ பரிவர்த்தனை, அனைவரையும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் தள்ளியுள்ளது. இந்தநிலையில், யுபிஐ முறையை மேலும் எளிதாக்கவும், பாதுகாப்பு, நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும் ஆகஸ்ட் ஒன்று முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.

அதன்படி உங்கள் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்க ஒரே நாளில் 25 முறை மட்டுமே, UPI செயலிகள் அனுமதிக்கப்படும். இது யுபிஐ பரிவர்த்தனைகளை இலகுவாக்க உதவும். PhonePe, Google Pay, Paytm போன்ற UPI செயலிகளில், ஒரே நாளில் 50 முறை வரை மட்டுமே கணக்கு இருப்பை பார்வையிட முடியும். பல யுபிஐ ஆப்களில் அடிக்கடி balance check request அனுப்பப்படுவதால், பணப் பரிமாற்றங்களில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க இது உதவும்.

Auto-Debit பணப்பரிவர்த்தனைக்கு புதிய நேர வரம்புகள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி EMI, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ஓடிடி சந்தாக்கள், காப்பீடு கட்டணம் போன்றவை காலை 10 மணிக்கு முன்னதாகவும், பிற்பகல் 1 முதல் 5 மணி வரையிலும், இரவு 9.30 மணிக்கு பிறகும் அனுமதிக்கப்படும். இது தடையற்ற சேவைக்கு வழிவகுக்கும்.

யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது ஒருவேளை தாமதம் ஏற்பட்டால் transaction நிலையை 90 வினாடிகள் இடைவெளியில் மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இது transaction retry மற்றும் refund செயல்பாடுகள் சீராக நடைபெற உதவும்

யுபிஐ மூலம் பணம் அனுப்பும் நேரம் 15 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.தவறான பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கும் நேரம் 10 வினாடிகளுக்கு மட்டுமே இருக்குமாறு மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் அனைத்தும் செயலியில் தானாகவே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

நாளுக்கு நாள் யுபிஐ பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பரிவர்த்தனையை எளிதாக்க,  தங்கு தடையின்றி சேவைகளை வழங்க புதிய விதிகள் பயன்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags: யுபிஐ பரிவர்த்தனைg payPhonePeupiPaytmGoogle PayWhat users should note? - New rules for UPI transactions from August 1
ShareTweetSendShare
Previous Post

ரூ.8 லட்சத்திற்கு ஏலம் போன மைக்கேல் சாக்சனின் சாக்ஸ்!

Next Post

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies