விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!
Jul 28, 2025, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம் பி ராஜேஷ்குமாரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் இப்பணிகள் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, அரூர் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தலைமுறை தலைமுறையாக அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

குன்றுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை உள்ளடக்கிய விவசாய நிலங்களில் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்பு வெளியானது தொடங்கி அரசாணை பிறப்பிக்கும் வரை தொடர் எதிர்ப்புகளை தெரிவித்தும் சிப்காட் அமைக்கும் பணிகளை தொடர்வது கண்டனத்திற்குரியது என விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விளை நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்துக் கொண்டு வரப்படும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக எம் பி ராஜேஷ்குமார் மற்றும், அமைச்சர் மதிவேந்தன் ஆகிய இருவரின் நெருக்கடியின் பேரிலேயே விளைநிலங்களைத் தரிசு நிலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு முரணாகச் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசின் விவசாய விரோதப் போக்கு தொடருமேயானால் அடுத்துவரும் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை வழங்கவும் அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.

தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வந்த நிலங்களை திடீரென தரிசு நிலம் என அறிவிப்பதும், அதில் சிப்காட் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருப்பதும் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நிர்வாகமே அதனைத் திட்டமிட்டு அழிக்கலாமா என்ற கேள்வியும் அனைவர் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: நாமக்கல்விவசாயிகள்Chipkot Industrial Estate on agricultural lands: Farmers are upsetவிளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகொந்தளிக்கும் விவசாயிகள்
ShareTweetSendShare
Previous Post

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

Next Post

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

Related News

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன்பு நில உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம்!

ஆலோசனை கூட்டத்தில் கண் கலங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள்!

காஞ்சிபுரம் : விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்!

கோவை : தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம், கராத்தே செய்து மாணவர்கள் சாதனை!

தூத்துக்குடி : உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : சிம்மவாஹினி கோயிலில் பி.வி.சிந்து நேர்த்திக்கடன்!

நிறைப்புத்தரிசி பூஜை : நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி

தெலங்கானா : பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

துருக்கி காட்டுத்தீ!

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

ப. சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம்!

ரஷ்யா – வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடக்கம்!

மு.க.முத்து மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies