அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!
Aug 24, 2025, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப் படும் நிலங்கள் பகல் நேரங்களில் கழிவுகளை கொட்டும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

426 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் கூடுதலாக 626 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்  பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கம்பி வேலிகள் அமைக்கப்படாமல் இருப்பதால் உணவக கழிவுகளும், தொழிற்சாலைகள் கழிவுகளும் கொட்டப்படும் குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளால் குறிப்பிட்ட பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, அதிகளவில் நடமாடும் வாகனங்களால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. அதோடு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி சட்டவிரோதச் சம்பவங்கள் அரங்கேற்றும் இடமாகவும் மாறிவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

சட்டத்திற்குப் புறம்பாகக் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகளுக்கு இரவு நேரங்களில் தீ வைக்கப்படுவதாலும் அவ்வப்போது அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. ஏற்கனவே கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அப்பகுதியில் உள்ள மரங்களில் குடியிருக்கும் பறவைகள் குடியிருப்பதாகக் கூறி மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டன. தற்போது கொட்டப்படும் கழிவுகளை உண்ண வரும் கழுகு உள்ளிட்ட பறவைகளால் மீண்டும் விமானங்களைத் தரையிறக்கும் போது இடையூறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

கோவை விமான நிலைய விரிவாக்கம் எந்தளவிற்கு அவசியமானதோ, அதே அளவிற்குக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்திக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tamil Nadu government shows negligence: Fear of bird strikes on planesஅலட்சியம் காட்டும் தமிழக அரசுகோவை விமான நிலையத்தை விரிவாக்கம்
ShareTweetSendShare
Previous Post

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

Next Post

சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies