கிரேட்டர் நிகோபார் திட்டம் - இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?
Sep 12, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

Murugesan M by Murugesan M
Sep 10, 2025, 09:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில், மத்திய அரசு மேற்கொள்ளும்  கிரேட்டர் நிகோபார்  திட்டம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்…

அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நிகோபார்  தீவில், 72 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. கலாதியா விரிகுடாவில் கண்டெய்னர்களை  கையாளும் வகையிலான துறைமுகம், பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கு என இரட்டைப் பயன்பாடு கொண்ட கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம், மின் உற்பத்தி நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், திட்டமிடப்பட்ட நகர்ப்புற டவுன்ஷிப்கள், தளவாட மையங்கள், முதலீட்டை ஈர்க்கச் சுற்றுலா மற்றும் தொழில்துறை மண்டலங்கள் போன்றவைக் கட்டமைக்கப்பட உள்ளன.

இந்தத் திட்டம், சரக்கு பரிமாற்றத்திற்காகச் சிங்கப்பூர் மற்றும் கொழும்பு போன்ற வெளிநாட்டுத் துறைமுகங்களை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்கும். தற்போது, ​​இந்தியாவின் பரிமாற்ற சரக்குகளில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானவை வெளிநாடுகளில் கையாளப்படுகின்றன, இதனால் மதிப்புமிக்க அந்நியச் செலாவணியை இழக்க நேரிடுகிறது. இந்தத் திட்டம் இந்தியாவை ஒரு கடல்சார்ச் சக்தி மையமாகவும், பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாகவும் நிலைநிறுத்தும்.

உலகின் மிக முக்கியமான கடல்சார்  துறைமுகங்களில் ஒன்றான மலாக்கா ஜலசந்திக்கான, இந்தியாவின் நுழைவு வாயிலாகக் கிரேட் நிக்கோபார்த் தீவு உள்ளது. இந்தோனேசியாவில் இருந்து 150 மைல்களுக்கும் குறைவான தொலைவிலும், மலாக்கா ஜலசந்தியிலிருந்து 160 கிலோ மீட்டர்  தொலைவிலும் உள்ளது இந்தத் தீவு.

மலாக்கா ஜலசந்தி, உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தையும், சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவிகிதத்திற்கு மேலும் கையாளுகிறது, இது ஆசியாவின் மிகவும் நுட்பமான எரிசக்தி மற்றும் வர்த்தக உயிர்நாடியாகவும் விளங்குகிறது.

இந்தியாவை  பொருத்தவரையில், கிரேட்டர் நிகோபார்  திட்டம், கடற்படை ஆற்றல், கடல்சார்  கண்காணிப்பு, இந்தோ-பசிபிக் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒப்பிட முடியாத ஆற்றலை வழங்குகிறது. புவிசார் அரசியல் பதற்றம் நிலவும் கால கட்டங்களில் இந்த வழித்தடத்தின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு இந்தியாவுக்குத் தீர்க்கமான நன்மையை அளிக்க வல்லது.

இது, தீவு ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், முன்னோக்கிய ராணுவ தளமாகவும் செயல்படுவதை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி இந்தோ-பசிபிக் பாதுகாப்பு கட்டமைப்பில், குறிப்பாகக் குவாட் கட்டமைப்பிற்குள் இந்தியாவின் பங்கை வலுப்படுத்துகிறது.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவின் எரிசக்தி இறக்குமதிகள் அனைத்தும் மலாக்கா நீரிணை வழியாகவே நடைபெறுகின்றன. இங்கு ஒரு வலுவான இந்திய கடற்படை இருப்பது, மோதலின் போது சீனாவின் எண்ணெய் விநியோகத்தை  கோட்பாட்டளவில் தடுக்கலாம் அல்லது சீர்குலைக்கலாம என்றும், இது சீனாவுக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தற்போது நடத்தும் கூட்டு முயற்சியான மலாக்கா நீரிணை ரோந்துப் படையில் இந்தியாவும் சேரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவின் ஆர்வத்தைச் சிங்கப்பூர் புரிந்து கொண்ட நிலையில், விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்தியா அந்தமான் கண்காணிப்பு நடவடிக்கைகளை MSP இன் கடல்-வான் ரோந்துகள், உளவுத்துறைப் பகிர்வு வழிமுறைகளுடன் ஒருங்கிணைக்கும். இது பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சீனாவின் எரிசக்தி உயிர்நாடியில் இந்தியாவின் இருப்பையும் உறுதிப்படுத்தும்.

கிரேட்டர் நிகோபார்  திட்டத்தால், இந்தியா கடல்சார் அதிகார மையமாக மாறும், எண்ணெய் மற்றும் வர்த்தகப் பாதைகளில் ,இந்தியாவின் செல்வாக்கு திறன் உயரும், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுடன் நெருக்கமான ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிரேட்டர் நிக்கோபார்  திட்டம் வெறும் உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும், இந்தோ-பசிபிக் அதிகாரச் சமநிலையில், இந்தியாவை முக்கிய பங்காளியாக நிலைநிறுத்த கூடியது.

ஆனால், ‘கிரேட் நிக்கோபார்த் தீவு திட்டம்’ என்பது பழங்குடியினரின் உரிமைகளை நசுக்கும் திட்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்  சோனியாகாந்தி விமர்சித்திருந்தார். எனினும், இந்தத் திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தைப் பாஜக அவருக்கு உடனடியாக நினைவூட்டியது.

பாஜக மூத்த தலைவரான அணில் அந்தோணி, சோனியாகாந்திக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்தை, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது மோசமானது என்று விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்க்கும் திட்டங்கள், நாட்டின் நலனுக்கானது என்பதை நாடு உறுதியாக நம்ப வேண்டும் என அசாம் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அசோக் சிங்காலும் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.

ஒருபக்கம் சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்கள் இடப்பெயர்வு இருந்தாலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது.

 

Tags: Greater Nicobar Project - What are the benefits for India?கிரேட்டர் நிகோபார் திட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

Next Post

ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச தயாராக உள்ளேன் – நயினார் நாகேந்திரன்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies