எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் - சிறப்பு தொகுப்பு!
Jul 24, 2026, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்த ஹோட்டல், ஒரே இரவில் உருவாக்கப்பட்டதல்ல. ஷங்கர் குழுமத்தால் உருவாக்கப்பட்ட  ஹில்டன் ஹோட்டலுக்கு, 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. நேபாளத்தின் சுற்றுலாத் துறையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன் ஹில்டன் ஹோட்டல் உருவாக்கப்பட்டது.

இதன் கட்டுமானத்தில் பல ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா காலத்தில் பணிகள் பெரிதும் தாமதமாகின. இருப்பினும், 7 ஆண்டு முயற்சியின் பலனாக, சுமார் 800 கோடி ரூபாய் முதலீட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் ஹில்டன் ஹோட்டல் திறக்கப்பட்டது.

நக்சல்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், நேபாளத்தின் மிக உயரமான ஹோட்டலாக அறியப்பட்டது. 64 மீட்டர் உயரமுள்ள இந்த ஹோட்டல், பல்வேறு பிரிவுகளில் கிட்டத்தட்ட 176 அறைகள் மற்றும் Suit-களை உள்ளடக்கியது.

இது ஆடம்பர ஹோட்டல் என்பதைவிட நேபாள கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்பட்டது. முகப்பில் புத்த மதக் கொடிகள், செங்குத்து கண்ணாடிகள், பகல்-இரவு நேர வெளிச்சத்திற்கு ஏற்ற வண்ணங்கள் என இந்த ஹோட்டல் உயிர் பெற்றது. இதன் கட்டிடக் கலையும் அதன் சுற்றுப்புறங்களுக்கு ஏற்ப அமைந்திருந்தது. ஒருபுறம் காத்மாண்டு நகர்ப்புற வீதிகளை நோக்கி சாய்ந்தபடியும், மறுபுறம் லாங்டாங் மலைத்தொடரை நோக்கியும் அமைந்து நேபாளத்தின் இயற்கை அழகை விருந்தினர்கள் ரசிக்கும்படி கட்டப்பட்டது.

5 உணவகங்கள், அரங்குகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் என எண்ணற்ற வசதிகள் கொண்ட இந்த ஹோட்டல், நேபாளத்தின் நில அதிர்வு வரலாற்றைக் கருத்தில் கொண்டு, மீள்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டது.

இப்படி நேபாளத்தின் அடையாளமாக விளங்கிய இந்த ஹோட்டல் இன்று உருக்குலைந்து காணப்படுகிறது. கண்ணாடி கட்டுமானத்துடன் கம்பீரமாக நின்ற இந்த ஹோட்டல், தீயில் கருகி, கண்ணாடிகள் வெடித்துச் சிதறி, சாம்பல் புகை படிந்து, உட்புறமும் சேதமடைந்து நிற்கிறது. பல ஆண்டு உழைப்பு, பெரும் முதலீடு, கலாசாரம் அடையாளம் என பார்த்து பார்த்து கட்டப்பட்ட இந்த ஹோட்டல், மக்களின் பெரும் கோபத்தால் சிதைக்கப்பட்டிருப்பது பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.

சமூக வலைதளங்கள் மீதான கட்டுப்பாடுகளால் நேபாளத்தில் தொடங்கிய போராட்டம், ஊழல், அரசியல் மந்தநிலை என விரிடைந்தது. பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் ராஜினாமா கூட மக்களின் கோபத்தை தணிக்கவில்லை. இதனால் அங்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு, சுற்றுலாத் துறைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நேபாளத்தின் பொருளாதாரத்திற்கே பெரும் அடியாக அமைந்துள்ளது.

Tags: nepal gen z protestnepal violent protesthilton hotel attackedNepal. protestnepal protest gen znepal protest newsnepal protest 2025protest in nepalviral nepal protestgen z protest nepal
ShareTweetSendShare
Previous Post

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

Next Post

வேலூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies