இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!
Aug 31, 2026, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

Murugesan M by Murugesan M
Oct 1, 2025, 09:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற ஏழு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. உள்நாட்டிலேயே உருவாக்கப்படவுள்ள ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் சிறப்புகள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

‘ADVANCED MEDIUM COMBAT AIRCRAFT’… சுருக்கமாக ‘AMCA’… தமிழில் ‘நவீன நடுத்தர போர் விமானம்’ என்றழைக்கப்படும் AMCA-தான் இந்தியா தயாரிக்கப்போகும் ஐந்தாம் தலைமுறை STEALTH FIGHTER. எதிரி நாட்டு RADAR-களில் சிக்காமல் ஊடுருவிச் சண்டை செய்யும் விமானங்களுக்கு STEALTH FIGHTER என்று பெயர்.

சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவில் 125 நவீன நடுத்தர போர் விமானங்களை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா உருவாக்கப் போகும் முதல் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், அமெரிக்காவின் F-22, F-35, சீனாவின் J-20, ரஷ்யாவின் Su-57-ஐப் போன்று நவீன தொழில்நுட்பங்களையும் ஆயுதங்களையும் கொண்டிருக்கும்.

முதற்கட்டமாக ஒற்றை இருக்கை மற்றும் இரட்டை ENGINE-கள் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன. ஏழாயிரம் கிலோ எடைகொண்ட ஆயுதங்களையும், ஆறாயிரத்து 500 கிலோ எரிபொருளையும் சுமந்தபடி 55 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் பெற்றவையாக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் VERSION-ல் அமெரிக்கா தயாரித்த GE F 414 ENGINE-ம் இரண்டாவதில் இந்தியா தயாரித்த ENGINE-ம் பயன்படுத்தப்படும் எனத்தெரிகிறது. அது அமெரிக்க ENGINE-விட அதிக திறன்கொண்டதாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. DRDO வடிவமைத்துள்ள இந்தத் திட்டத்தில் இணைய இந்திய நிறுவனங்கள் முன்வர வேண்டுமென மத்திய அரசு அழைப்புவிடுத்தது. அதை ஏற்று TATA ADVANCED SYSTEMS LTD, HINDUSTAN AERONAUTICS LIMITED, ADANI DEFENCE உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள், DRDO உடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க முன்வந்துள்ளன.

அவை சமர்ப்பித்துள்ள ஒப்பந்தப்புள்ளிகளை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. அவர்கள் தரும் பரிந்துரையின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகம் இறுதி முடிவை எடுக்கும். தற்போதைய நிலவரப்படி இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

2035-ஆம் ஆண்டுக்குள் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் AIR FORCE-ல் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று கால தாமதம் ஏற்படும் எனத்தெரிகிறது. பிரான்ஸிடம் இருந்து 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா வாங்கப்போகும் 26 ரபேல் விமானங்கள் இந்த இடைவெளியை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர கடந்த பத்தாண்டுகளில் MAKE IN INDIA திட்டத்தின் கீழ் ஏவுகணைகள் உள்பட பல்வேறு ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் இந்தியாவின் பலம் என்ன என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டது. அதை மேலும் வலுப்படுத்தி வல்லரசாக உருவெடுக்கும் பயணத்தின் ஒரு பகுதிதான் இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்.

Tags: Make in indiaIndia's 5th generation fighter jets: 7 companies compete to get the contract5-ஆம் தலைமுறை போர் விமானங்கள்‘ADVANCED MEDIUM COMBAT AIRCRAFTAMCAநவீன நடுத்தர போர் விமானம்ENGINE
Share
Tweet
SendShare
Previous Post

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

Next Post

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

Related News

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies