சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 4 கிலோ தங்கம் : பின்னணியில் தொழிலதிபர் எழுதிய கடிதம்!
Jul 24, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 4 கிலோ தங்கம் : பின்னணியில் தொழிலதிபர் எழுதிய கடிதம்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு தங்கமுலாம் பூசும் செலவை ஏற்றத் தொழிலதிபர் எழுதிய கடிதம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், 2019ஆம் ஆண்டு செப்பனிடப்பட்டு, அதே ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்டும் அணிவிக்கப்பட்டன.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டபோது தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் வழங்கபட்ட 42.8 கிலோவாக இருந்த கவசங்கள், செப்பனிட்ட பிறகு 38 கிலோவாகக் குறைந்திருந்தது.

இந்த விவகாரம் கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மாயமான 4.54 கிலோ தங்கம் குறித்த வழக்கில் உண்மையைக் கண்டறிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ளக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின் தேவசம் போர்டுக்கு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் இ-மெயில் வாயிலாக எழுதிய கடிதம் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சபரிமலையின் துவாரபாலகர்கள் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்ததாகவும், தம்மிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்தத் தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா எனவும் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. இதனைப் படித்துப் பார்த்துக் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

துவாரபாலகர்கள் சிலையில் இருந்த தங்கம் மாயமானது குறித்தும், அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்குக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: #sabarimala update4 kg of gold missing from Sabarimala Ayyappa temple: A letter written by a businessman in the background
ShareTweetSendShare
Previous Post

2 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர்!

Next Post

நடிகர் அஜித்குமாருக்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து!

Related News

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies