கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!
Oct 28, 2025, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 28, 2025, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பணிகள் எப்படி நடத்தப்படும் என்பது குறித்து, தேர்தல் ஆணையம் விரிவான தகவல்களையும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை வந்து சோதனை செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க இருப்பதையும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உண்மையான வாக்காளரின் வாக்குகள் விடுபட்டால் மேல் முறையீடு செய்து வாக்கு பெறுவதை உறுதிப்படுத்த முடியும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, அறிவிப்பு வரும் முன்பே எதிர்ப்பைத் தொடங்கி விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம், குறிப்பிட்டவர்களின் பெயர்களை நீக்க பாஜக முயற்சி செய்வதாக கூறி இருக்கிறார். இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்று பெற்று விடும் என்று தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்போவது தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைத் தான். அவர்கள் கட்சி பாகுபாடின்றி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி பணியாற்றி, போலி வாக்காளர்கள் இருந்தால் நீக்கப் போகிறார்கள். இரட்டை வாக்குகள் இருந்தால் நீக்கப்போகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு வரும் முன்பே முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? தமிழக அரசு ஊழியர்கள் மீதே அவருக்கு நம்பிக்கையில்லையா? இதிலிருந்தே, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கான வாக்காளர் தரவு பகுப்பாய்வில் மொத்தம் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. 4,370 இரட்டை வாக்காளர் பதிவுகளும், போலி முகவரியுடன் 9,133 வாக் காளர்களும் உள்ளதாக தெரிகிறது.

கொளத்தூர் தொகுதியில் உடனடியாக தணிக்கை மேற்கொண்டு, போலி வாக்காளர் களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தொகுதியிலேயே இப்படி நிலைமை என்றால் மற்ற தொகுதிகளிலும் எவ்வளவு போலி வாக்காளர்கள் இருக்கக்கூடும்? என்றும் எல்.முருகன் தெரிவித்துளளார்.

Tags: Kolathur constituencysir?fake votersTamil NaduElection commissionBiharminister l murugan
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

Next Post

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies