போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்து : விமானிகள் செய்தது பிழையா?
Sep 11, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்து : விமானிகள் செய்தது பிழையா?

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அகமதாபாத்தில் நடந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்துக்கு விமானிகளைக் குறை சொல்வது அருவருப்பானது எனப் போயிங் முன்னாள் அதிகாரி பியர்சன் கூறியுள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி, குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்குக் கிளம்பிய போயிங் 787 ட்ரீம்லைனர் ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்தது.

இந்தப் பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் 10க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மரணமடைந்தனர்.

ஓடுபாதையில் இருந்து போதுமான உயரத்துக்கு மேலே எழும்ப முடியாத சுழலில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்றும், லெண்டிங் கியர் பழுது காரணமாக விமானச் சக்கரம் செயல்படாமல் போயிருக்கலாம் என்றும் விமானத்தின் மீது பறவை மோதி இருக்கலாம் என்றும் விமான என்ஜின் இயக்கத்தில் தடை ஏற்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கடந்த ஜூலை மாதம் Aircraft Accident Investigation Bureau வெளியிட்டது. புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானத்தின் இரு என்ஜின்களுக்குமான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இரண்டும் திடீரென “கட்-ஆஃப்” நிலைக்கு மாறி, என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்றதால் சில வினாடிகளிலேயே விமானம் விபத்துக்குள்ளானது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இது விமானிகளின் கவனக் குறைவே விமான விபத்துக்குக் காரணம் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த முதற்கட்ட அறிக்கையை “கொடூரமானது” என்று விமர்சித்துள்ள முன்னாள் போயிங் மூத்த மேலாளர் பியர்சன், விமானிகளைக் குற்றம் சொல்வதை கடுமையாகக் கண்டித்துள்ளார். போயிங்கின் தரக் கட்டுப்பாட்டு தோல்விகள் மற்றும் பலவீனமான ஒழுங்குமுறை அமைப்புக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

விமானங்கள் AI மூலம் இயங்கும் என்று கூறப்பட்டாலும், இன்றும் விமானங்கள் ஊழியர்களால் தான் கட்டமைக்கப் படுகின்றன என்று கூறியுள்ள பியர்சன் உற்பத்தி, தரக் கட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலி ஆகிய பணிகளில் உள்ள ஊழியர்கள் அதிகப்படியான அழுத்தத்தில் உள்ளனர் என்றும் விவரித்துள்ளார்.

மின்சார அசுரன் என்று அழைக்கப்படும் நம்பமுடியாத அளவுக்குச் சிக்கலான விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர், வடிவமைக்கப்பட்ட பிறகு நடந்த செயல்பாட்டு சோதனைகளின் போது மீண்டும் மீண்டும் தோல்விகளையே சந்தித்ததாகப் பியர்சன் விளக்கியுள்ளார். இறந்த விமானிகள் மீது பழி சுமத்துவதற்கு முன்பாகச் சாத்தியமான அமைப்புரீதியான கோளாறுகள் மற்றும் தோல்விகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முதற்கட்ட அறிக்கையில், விமானிகள் வேண்டுமென்றோ தற்செயலாகவோ தவறு செய்தார்கள் என்று மறைமுகமாக உணர்த்துவதற்காகவே விமானிகளின் உரையாடலின் மிகச் சிறிய பகுதி மட்டுமே வெளியிடப்பட்டதாகவும் பியர்சன் கூறியுள்ளார். Aircraft Communications Addressing and Reporting System மற்றும் Airport Handling Manual என்ற அமைப்புகளின் தரவுகள் எதுவும் இந்த அறிக்கையில் இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள பியர்சன், விபத்து விசாரணை செயல்முறை நவீன விமானங்களின் தொழில் நுட்பத்துக்குப் பொருந்தவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

Tags: air india filghtBoeing 787 Dreamliner plane crash: Did the pilots make a mistake?Aircraft Communications Addressing and Reporting SystemAirport Handling Manual
Share
Tweet
SendShare
Previous Post

எவரெஸ்ட் சிகரத்தை சூழ்ந்து கிடக்கும் குப்பைகளால் அதிர்ச்சி!

Next Post

ரஷ்யா-உக்ரைன் சமாதான பேச்சு தொடங்கி நடுவண் தேர்தல்கள் வரை…! – டிரம்ப் நிர்வாகத்திற்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக மாறும் 2026…?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies