தாயும், மகளும் வளர்க்கும் காளை : ஜல்லிக்கட்டு களத்திற்கு தயாராகும் "சித்தன்"!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாயும், மகளும் வளர்க்கும் காளை : ஜல்லிக்கட்டு களத்திற்கு தயாராகும் “சித்தன்”!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளைகள் தயாராகி வருகின்றன. உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையை தயார்படுத்தும் பணியில் தாயும் மகளும் ஈடுபட்டுள்ளனர். அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

பொங்கல் திருநாளை ஒட்டி உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு களைகட்டுவது வழக்கம். அந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் சீறிப் பாயக் காளைகள் தயாராகி வருகின்றன. அதிலும் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையை தயார்படுத்தும் பணியில் தாயும் மகளும் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை பாலமேடு வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் – மஞ்சுளா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மகள் அழகு பிரியாவும் தாய் மஞ்சுளாவும் ஜல்லிக்கட்டு மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளனர். இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக வீர தீரத்துடன் காளையை வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைக்குத் தங்களது குலதெய்வம் பெயரில் சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் எனப் பெயரிட்டுள்ளனர்.

குழந்தையிடம் நெருக்கமாகப் பேசிப் பழகுவதுபோல் தங்களது ஜல்லிக்கட்டு காளையை பராமரித்து வளர்த்து வருகின்றனர். “எங்கள் குடும்பத்தில் ஆண் குழந்தைகள் இல்லை, அனைவருக்குமே பெண் குழந்தைகள் அதனால் இந்த ஜல்லிக்கட்டு காளை எங்களுக்குக் குடும்ப வாரிசு” என உணர்ச்சி பொங்க கூறுகிறார்

அழகுபிரியா. மக்காச்சோளம், புண்ணாக்கு, பிஸ்கட், வாழைப்பழம், வைக்கோல், கடலைச் செடி எனக் காளைக்கு உணவளிக்க ஜல்லிக்கட்டுக்கு சீறிப் பாயத் தயாராகி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் களம் கண்ட சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் காளை வீரர்களிடம் சிக்காமல் எகிறி குதித்து வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.

30 ஜல்லிக்கட்டுகளிலும் அழகு பிரியா தனது தந்தையுடன் நேரடியாக வாடிவாசல் சென்று காளையை களமாட வைத்துள்ளார். இந்தக் காளை மட்டுமின்றி மேலும் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளையும் அழகுபிரியா, அவரது தாய் மஞ்சுளா உள்ளிட்டோர் வளர்த்து வருகின்றனர்.

தற்போது சீலைக்காரி அம்மன் என்ற சித்தன் காளை ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் நிலையில், அது மீண்டும் சீறிப் பாய்வதை காண தாய், மகள் மட்டுமின்றி பலரும் காத்திருக்கின்றனர்.

Tags: ஜல்லிக்கட்டுMother and daughter raise a bull: "Sithan" prepares for the Jallikattu arenaJallikkatu
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேச தேர்தல் : பிரதமர் கனவில் நாடு திரும்பும் கலிதா மகன்!

Next Post

Epstein Files-ல் ட்ரம்ப் புகைப்படம் மாயம் : அதிர்ச்சி தரும் எப்ஸ்டீனின் அரச குடும்ப தொடர்புகள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies