வங்கதேச பள்ளி இசை நிகழ்ச்சியில் வன்முறை : இசை ரசிகர்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் கற்களை வீசி தாக்குதல்!
Sep 12, 2026, 12:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கதேச பள்ளி இசை நிகழ்ச்சியில் வன்முறை : இசை ரசிகர்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் கற்களை வீசி தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புகழ்பெற்ற வங்கதேச ராக் இசைக்கலைஞர் ஜேம்ஸின் 185வது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஜேம்ஸ் என்ற பெயரில் அறியப்படும் புகழ்பெற்ற வங்கதேச ராக் இசைக்கலைஞரான ஃபாரூக் மஹ்பூஸ் அனாம், அந்நாட்டின் ராக் இசையின் குரு என்று கொண்டாடப் படுகிறார். தனது ராக் பாடல்கள் மூலம், தேசத்தின் இசை அடையாளத்தை மீட்டெடுப்பதிலும் தேசிய உணர்வை ஊட்டுவதிலும் ஃபாரூக் முக்கிய பங்காற்றி வருகிறார். 1970-களின் பிற்பகுதியில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து, நாட்டுப்புற இசையின் ஆன்மீக சாரத்துடன் ஹார்ட் ராக் இசையைக் கலந்து, அனைவரையும் கவரும் வகையில் ஒரு இசைக்கலைஞராகப் பாடகராக விளங்கி வருகிறார்.

‘ஸ்டேஷன் ரோடு’ மற்றும் ‘ஜெயில் தேகே போல்ச்சி’ உட்பட அவரது பல பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. முதலில் ஃபீலிங்ஸ் என்று அழைக்கப்பட்ட நகர் பவுல் இசைக்குழுவின் முன்னணிப் பாடகரான ஜேம்ஸ், தெற்காசிய இசைஉலகத்தின் பீகி பீகி” மற்றும் அல்விதா போன்ற திரைப்படப் பாடல்கள் மூலம் இந்தியாவிலும் ஒரு பிரபல பாடகராக, எல்லை தாண்டிய செல்வாக்கு மிக்க கலாச்சாரத் தூதுவராகவும் ஜேம்ஸ் அறியப் படுகிறார்.

இந்நிலையில், வங்கதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபரித்பூர் ஜிலா பள்ளியின் 185வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவாக ஜேம்ஸின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் ஜேம்ஸ் மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென நுழைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், மேடையை நோக்கி செங்கற்களையும் கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் பள்ளி மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நூலிழையில் ஜேம்ஸ் உயிர் தப்பிய நிலையில், இசைக்குழு உறுப்பினர்களுக்கும் மற்ற கலைஞர்களும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்ததாகவும், திடீர் வன்முறை தாக்குதல்களால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஆண்டுவிழா நிகழ்ச்சியின் விளம்பரம் மற்றும் ஊடகத் துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரஜிபுல் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.

ஃபரித்பூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஷமீம் அறிவித்துள்ளார். அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்க்ஷ பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையிலும் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்தே, வங்கதேசத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை உடற்பயிற்சி ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுக்குப் பயந்து அந்தத் திட்டத்தை முகமது யூனுஸ் அரசு ரத்து செய்துள்ளது.

தொடர்ந்து இசை மற்றும் கலாச்சார விழாக்களை நடத்தவிடாமல் தடுத்து வருகின்றன. இசைக்கலைஞர்கள் தாக்கப்படுவதும், கலாச்சார நிறுவனங்கள் அழிக்கப்படுவதும் வங்கதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றாலும், முகமது யூனுஸின் இடைக்கால அரசு இசை கலாச்சாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இசைக்கலைஞர்கள் கூறுகின்றனர்.

Tags: வன்முறைViolence at a Bangladeshi school music event: Islamic terrorists attacked music fans by throwing stones!வங்கதேச பள்ளி இசை நிகழ்ச்சி
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானை தோலுரித்து காட்டிய துரந்தர் : பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய படங்கள் – கலக்கத்தில் அசிம் முனீர்!

Next Post

வங்கதேசத்தில் ஜிஹாதிகள் ஆதிக்கம் : இந்தியாவிற்கு எல்லையில் அதிகரிக்கும் சவால்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies