திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நாய் குறுக்கே வந்ததால் சாலை தடுப்பில் ஏறி கார் சிக்கிக்கொண்டது.
தெள்ளார் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது காரில் சென்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க காரை லேசாக திருப்பி உள்ளார்.
இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை நடுவே உள்ள தடுப்பின் மீது மோதி இடையில் சிக்கி கொண்டது. இதில் காரில் பயணித்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
















