இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தனது அன்பு நண்பர் ட்ரம்புடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான வரி இனி 18 சதவீதமாக விதிக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ள அவர்,
இந்த அற்புதமான அறிவிப்புக்காக அதிபர் ட்ரம்பிற்கு 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து பணியாற்றும்போது அது மக்களுக்கு பயனளிப்பதுடன்,
இருதரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் ஏராளமான வாய்ப்புகளை திறந்துவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்,
உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு ட்ரம்பின் தலைமை மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்கான ட்ரம்பின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ள பிரதமர் மோடி,
நமது உறவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்ல இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
















