தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்கான குழுக்கள் அமைக்க அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த இரு மாதங்களாக காத்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்த கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தலைமையின் இந்த முடிவு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணியில் வெளியேறுவதை தடுப்புதற்காக திமுக தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
















