உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்கள் ‘விசில்’ பயன்படுத்த, நகராட்சி நிர்வாகத் துறை திடீரென தடை விதித்துள்ளது.
வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணிகளை செய்யும் துாய்மை பணியாளர்கள், தாங்கள் வந்திருப்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விசில் பயன்படுத்துவது வழக்கம்.
இந்தநிலையில் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தல் நெருங்குவதாலும் உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்கள் ‘விசில்’ பயன்படுத்த, நகராட்சி நிர்வாகத் துறை தடை விதித்துள்ளது.
அதற்கு பதிலாக ஒலிப்பெருக்கியை பயன்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. இதேபோன்று அரசு பேருந்துகளில் நடத்துநர்கள் விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
















