தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கோவை வடவள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகனை முதலமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு இல்லை என்றும், “470 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது என்றும் அவர் சாடினார்.
“சொத்து வரி மற்றும் மின்சாரக் கட்டணம் 300 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதே திமுக அரசின் நோக்கமாக உள்ளதாகவும் நயினார் கூறினார்.
















