தருமபுரியில் தாயின் தவறான உறவால் 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டில் சூடுவைத்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
தருமபுரியில் சாலை விநாயகர் கோயில் தெருவில் வசிக்கும் சிவசங்கர் – எழிலரசி தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையில் ஐயப்பன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் குழந்தையுடன் எழிலரசி, அவருடன் வேறொரு இடத்தில் குடியேறி உள்ளார்.
இந்நிலையில் ஐயப்பன் குடிபோதையில், எழிலரசியின் குழந்தைக்கு தினமும் சிகரெட்டால் உடல் முழுவதும் சூடுவைத்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனால் குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















