ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அம்ரீஷ் மற்றும் தீபேஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக வீரர்கள் அம்ரீஷ், தீபேஷ் ஆகியோரை தமிழ்நாடு கிரிக்கெட் நிர்வாகிகள் கவுரவித்தனர்.
மேலும், இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை நிர்வாகிகள் வழங்கினர்.
















