ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்தாண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, அத்துமீறிய பாகிஸ்தானின் போர் விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் டிரோன்களை வீழ்த்த எஸ்-400 அமைப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.
S-400 நீண்ட தூர ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிக்குள் 314 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விமானம் மற்றும் ரேடார் நிலைகளை இந்தியா துல்லியமாக தாக்கியது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நடந்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு ராணுவ உபகரணங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 120 குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் 168 நீண்ட தூர ஏவுகணைகள் என மொத்தம் 288 எஸ்-400 ஏவுகணை வாங்க அனுமதியளிக்கப்பட்டது.
இதே கூட்டத்தில், பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
















