சேலம் மாவட்டம் சங்ககிரியில் தனியார் கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
குப்பனூர் பிரிவு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல காலை உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உணவில் பல்லி விழுந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















