கோவை குண்டு வெடிப்பு போல் இனியொரு குரூரம் நடைபெறக் கூடாது என உறுதியேற்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த 1998-ஆம் ஆண்டு இதே நாளில் பல அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியதோடு நூற்றுக்கணக்கான மக்களை மருத்துவப் படுக்கையில் தள்ளிய கோவை குண்டுவெடிப்பின் அதிர்வலை இன்னும் அம்மண்ணை விட்டு அகலவில்லை
28 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அக்கோர சம்பவத்தின் ரணமும் வடுவும் இன்னும் மக்கள் மனதை விட்டு அழியவில்லை. குறிப்பிட்ட சிலரின் வெறுப்புணர்வினால் அன்று கொத்துக் கொத்தாக செத்து மடிந்த ஒன்றும் அறியாத அப்பாவி ஆன்மாக்களை இன்று கனத்த இதயத்துடன் நினைவு கூர்வோம்.
ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் போற்றிப் பாதுகாக்கும் நமது பாரத மண்ணில் மதவெறுப்பின் காரணமாக இதுபோன்று இனியொரு குரூரம் நடைபெறக் கூடாது என உறுதியேற்போம் என நயினார் நாகேந்திரன தெரிவித்துள்ளார்.
















