திருவள்ளூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புட்லுார் பகுதியைச் சேர்ந்த ஷியாமளா என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பவித்ரா என்பவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வந்ததாக கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷியாமளாவை தாக்கிவிட்டு செயினை பறிக்க முயன்றார்.
இதில் காயமடைந்த ஷியாமளா , பவித்ராவை வீட்டிற்குள் வைத்து வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு கூச்சலிட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் பவித்ரா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
















